Wednesday 18 January 2017

சின்னி கிருஷ்ணா நந்திதா கிருஷ்ணா -பின்புலங்கள் CHINNI NANDITHA KRISHNA BACKGROUNDS

சின்னி கிருஷ்ணா குடும்ப பின்னணி

 Dr. சின்னி கிருஷ்ணா 


அண்ணாபல்கலைக்கழகத்தின் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜியில் கெமிகல் எஞ்னியரிங் படித்தவர். பென்சில்வேனியா, லூயிஸ்பர்க்கிலுள்ள பக்னெல் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு முடித்து 1972-இந்தியா திரும்பி 1974 ஆம் வருடம் ASPICK ENGINEERING PRIVATE LIMITED என்ற நிறுவனத்தை D-5, SIDCO Industrial Estate Guindy, Chennai- 600 032 என்ற இடத்தில் ஆரம்பித்து fabrication வேலைகளை செய்து வந்தார். இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் இவனே. பல இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சப்ளை செய்து வந்தார்.


புளு கிராஸ் நிறுவனத்தை தன் தந்தை கேப்டன் சுந்தரம் மற்றும் தாயார் உஷா சுந்தரத்துடன் சேர்ந்து  26/10/1964 சங்கத்தில் பதிவு செய்தான். பதிவு எண் 129/1964 அதன் பின் விலங்கு நலவாரியத்தின் துணைத் தலைவர் ஆனான். விலங்குகளின் விசயங்களில் பணம் இருப்பதை அறிந்து கொண்டு லண்டனில் இயங்கிவரும் World Society for the Protection of Animals (WSPA) உறுப்பினராகி அதன் இந்திய கிளையை D -21, 2nd Floor, Corporate Park, Sector 21, Dwarka, New Delhi – 110 075 யில் ஆரம்பித்தான். 



புளு கிராஸ் நிறுவனத்தை தன் தந்தை கேப்டன் V.சுந்தரம் மற்றும் தாயார் உஷா சுந்தரத்துடன் சேர்ந்து  26/10/1964 சங்கத்தில் பதிவு செய்தான். பதிவு எண் 129/1964 அதன் பின் விலங்கு நலவாரியத்தின் துணைத் தலைவர் ஆனான். விலங்குகளின் விசயங்களில் பணம் இருப்பதை அறிந்து கொண்டு லண்டனில் இயங்கிவரும் World Society for the Protection of Animals (WSPA) உறுப்பினராகி அதன் இந்திய கிளையை D -21, 2nd Floor, Corporate Park, Sector 21, Dwarka, New Delhi – 110 075 யில் ஆரம்பித்தான்.இவருக்கு Pennsylvania Society for the Prevention of Cruelty to Animals (PSPCAமிக்க தொடர்புண்டு.

Humane Society International  என்ற நிறுவனம் 2011-இல் ஃப்ளோரிடாவில் நடந்த  Animal Care Expo விலங்கு நலத்துக்கு செய்த காரியங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை கொடுத்தது. 


Dr. நந்திதா C கிருஷ்ணா



சின்னி கிருஷ்ணாவின் மனைவி. எழுத்தாளர், சுற்றுப்புறவியலாளர், வரலாற்றறிஞர், கல்வியலாளர் எனக் கூறிக் கொள்பவர். சென்னை பல்கலைக்கழகத்தில்  Ph.D. க்கு வழிகாட்டி. சின்னி கிருஷ்ணாவின் மனைவி. Tata Projects Ltd இல் துணைத்தலைவராக பணிபுரிந்த A.R. ஜகன்நாதன் மற்றும் மத்திய சுற்றுலாத்துறையில் துணை-இயக்குனர் பணியாற்றிய சகுந்தலாவின் மகள். 

                              A.R. ஜகன்நாதன் சகுந்தலா

C.R.பட்டாபிராமன் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும், திருவாங்கூர் திவானாகவும்,  மத்திய அரசில் பணியாற்றியவர்.பாட்டி கௌரி கல்யாண வைபோகமே இயற்றிய சரஸ்வதி.

C.R.பட்டாபிராமன்

C.R.பட்டாபிராமன் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும், திருவாங்கூர் திவானாகவும்,  மத்திய அரசில் பணியாற்றியவர்.பாட்டி கௌரி கல்யாண வைபோகமே இயற்றிய சரஸ்வதி.
Conjeevaram Hindu Education Society Blue Cross of KanchipuramHSI India, நிறுவனங்களின் தலைவி மற்றும் பொன்னி சுகர்ஸ் (Ponni Sugars Ltd) கணவனின் Aspick Green Tech P Ltd, Humane Society International. இல் உறுப்பினர்.மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் கீழ் சென்னை, ஆழ்வார்பேட்டை, எண்.1 எல்டாம்ஸ் ரோடில் இயங்கும் C.P. RAMASWAMI AIYAR FOUNDATION மற்றும் C.P.R. Environmental Education Centre (CPREEC) நிறுவனங்களின் இயக்குனர். 15, அக்டோபர், 2016 இந்த நிறுவனத்தின் 50-வது ஆண்டு விழாவில் இந்தியாவின் தலைமை நீதிபதி கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது. பிரசாந்த் கிருஷ்ணா, ருத்ரா கிருஷ்ணா என இரு மகன்கள்.

இவர் உரிமையுள்ள நிறுவனங்கள்
C.P. Art Centre (1978)
C.P.R. Institute of Indological Research (1981)
The Grove School Chennai (1983)
Saraswathi Kendra Learning Centre for Children (1985)
Kanchi Heritage House & Shakunthala Jagannathan Museum of Folk Art (2001)
Rangammal Vidyalaya (2001)

மேதாவி எழுதிய நூல்கள்

SACRED PLANTS OF INDIA
PAINTINGS OF THE VARADARAJA PERUMAL TEMPLE, KANCHIPURAM
VARAHEESWARATEMPLE
KANCHIPURAM – A HERITAGE OF ART AND RELIGION
SHAKTI IN ART AND RELIGION
FOLK ARTS OF TAMILNADU
FOLK TOYS OF SOUTH INDIA
NATTUPURA KALAIGAL

பிரசாந்த் கிருஷ்ணா
பிரசாந்த் கிருஷ்ணா

நந்திதா சின்னி கிருஷ்னா தம்பதிக்கு முதல்ம் மகன். புளூ க்ராஸ் உறுப்பினர். C P ராமசாமி ஐய்யர் நிறுவனத்தின் செயல் அலுவலர்.

ருத்ராகிருஷ்ணா

                              ருத்ராகிருஷ்ணா,லிடியா

நந்திதா சின்னி கிருஷ்னா தம்பதிக்கு இரண்டாம் மகன்,.சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தில்(Cardiff University) மேற்படிப்பு. மனைவி லிடியா மகன் அகில். புளூ க்ராஸ் உறுப்பினர். மனைவி லிடியா. மகன் அகில்.

இவர்களுடன் கைகோர்த்துள்ள மற்ற நிறுவனங்கள்

1. Compassion Unlimited Plus Action (CUPA)

லண்டனை தலைமையிடமாக கொண்ட நிறுவனத்தின் இந்திய தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. இந்திய தலைவர் சனோபர் பரூச்சாrs. Sanober Z. Bharucha

                                சனோபர் பரூச்சா


2.Federation of Indian Animal Protection Organisations (FIAPO)

நார்மா அல்வரேஸ்(Norma Alvares)

                                   நார்மா அல்வரேஸ்

பாம்பே உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.People for Animals Goa என்ற நிறுவனத்தின் கிளையை கோவாவில் ஆரம்பித்தவர்.பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர்.



அர்பன் சர்மா
இந்நிறுவனத்தின் செயல் தலைவர் அர்பன் சர்மா(Arpan Sharma) ஆவார்.

3.People For Animals


இந்நிறுவனத்தின் தலைவர். மேனகா காந்தி 


4. People for the Ethical Treatment of Animals' (PETA)



பீட்டாவின் இந்திய செயல் தலைவர் பூர்வா ஜோஷிபூரா(poorva joshipura)

CP.சரவணன், வழக்கறிஞர்


Wednesday 11 January 2017

பீட்டா வரலாறு-History of Peta


பேடா அமைப்பு மார்ச் 1980-இல் இங்கிரிட் நியூகிறுக் (Ingrid Newkirk) மற்றும் அலெக்ஸ் பகிகோ(Alex Pacheco) இருவரால் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் மேரிலாண்டில் ராக்வில்லில் (Rockville) தொடங்கப்பட்டு தற்பொழுது   விர்ஜீனியாவிலுள்ள நார்ஃபோல்கில் இயங்கி வருகிறது.

நியூகிறுக்கை பற்றி

                                 இங்கிரிட் நியூகிறுக்

நியூகிறுக் பிரிட்டனில் 1949-இல் பிறந்தவர். அவருக்கு 7-வயது இருக்கும் பொழுது நேவிகேஷனல் இஞ்சினியராக டெல்லிக்கு பணிக்கு வந்தார். நியூகிறுக்கின் தாயார் அன்னை தெரஸாவின் தொண்டு நீருவனத்தில் தன்னார்வலராக சேர்ந்து பணியாற்றினார். நியூகிறுக் ஹ்ஜிமலயாவில் ஒரு பள்ளியில் சேர்ந்து பயின்றார்.

அவருக்கு 16-வயதிருக்கும் போது அவர் குடும்பம் ஃப்ளோரிடாவுக்கு குடிபெயர்ந்தது.  அங்கு ஸ்டீவ் கிறுக்கை மணம் புரிந்தார். ஆனால் 1980-இல் விவாகரத்து பெற்றார்.

அலெக்ஸ் பாகிகோ பற்றி

                                    அலெக்ஸ் பாகிகோ

இவர் இல்லியனாய்ஸில் உள்ள ஜாலியட்டில் பிறந்தார். அதன் பின் மெக்ஸிகோவுக்கு சென்றுவிட்டார். நியூகிறுக்குடன் சேர்ந்து பீட்டா அமைப்பை உருவாக்கினார்.  2002-ஆம் ஆண்டு பீட்டாவிலிருந்து வெளியேறி 600 Million Stray Dogs Need You என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.


சில்வர் ஸ்பிரிங் குரங்கு வழக்கு(Silver spring monkeys case)


மெரிலாண்டில் உள்ள நடத்தை ஆய்வு மையத்தில்(Institute of Behavioral Research) தன்னார்வலராக சேர்தார். அக்கு எட்வர்ட் தாப் என்பவர் குரங்கை கட்டி ஒவ்வொரு உணர்வு மண்டலங்களைதுண்டித்து ஆராய்ந்ததை  இரகசியமாக படம் எடுத்தார். மிருகங்களுக்காக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மிருக உரிமைக்காக தொடரப்பட்ட முதல் வழக்கு இதுவே ஆகும். ஆராய்ச்சிக்கு மனித உரிமைகள் பொருந்தாது என்று தீர்ப்பளித்தாலும், சில வழிமுறைகளை வகுத்தனர். 

  
டான் மேத்யூஸ் (Dan Mathews)


பீட்டாவில் தற்போது முதுநிலை துணைத்தலைவராக பணியாற்றுபவர். முக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்பவர்.

பால் பண்னை, கம்பளி உற்பத்தி, விலங்கு ஆய்வு மற்றும் மாமிச உணவுக்கெதிராகவும், கோழிச் சண்டை, நாய் சண்டை, மாட்டுச் சண்டை போன்ற விளையாட்டுகளிலிருந்து விலங்குகளின் உரிமையை காத்தவர்களாக கூறுகிறார்கள்


தற்பொழுது, இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லேண்ட், ஜெர்மனி,இந்தியா ஆஸ்திரேலியா, ஆசியா பசிஃபிக் பகுதிகளில் தன் பயணத்தை ஆரம்பித்துள்ளது.


ஒஹியோவிலுள்ள பீட்டாவின் குறியீடு (Trade mark)


இந்தியாவில் பீட்டா

2000-ஆம் ஆண்டு இந்தியாவில் கால் பதித்த பீட்டா, முதலில் மாமிசங்களை உண்ண வேண்டாம், விலங்கு தோலினை பயன்படுத்த வேண்டாம் என்று தொடங்கியது. எல்லா தொண்டு நிறுவனங்களும் சங்கங்களாகவும், அறக்கட்டலையாகவும் பதிவு செய்யும் வேளையில் பீட்டா தன்னை கார்பொரேட் நிறுவனமாக CIN: U74899DL2000NPL10321 பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் பீட்டாவுடன் கைகோர்த்துள்ள முக்கியஸ்தர்கள்

ஜான் அப்ரஹாம், சாகித் கபூர், ராகுல் கண்ணா, ஷில்பா ஷெட்டி, செலினா ஜெட்லி, திலீப் குமார், சாய்ரா பானு, யானா குப்தா, குல்சன் குராவர், மஹிமா சௌத்ரி, ஹேமா மாலினி, அதுல் கஸ்பெகர், ஜியா கான், ரவீனா டாண்டன், ராகுல் தேவ், ஹேமந்த் திருவேதி, ஜாக்கி ஷ்ராஃப், அன்ல் கும்லே, மாதவன், அமிஷ்ஹ் படேல், ஈஷா நரங், மலைகா அரோரா கான், சத்ருகன் சின்கா, பங்கஞ் அத்வாணி (உலக பில்லியர்ஸ் சாம்பியன்), சுசில் குமார் (ஒலிம்பிக் மெடலிஸ்ட்)

பீட்டாவின் இந்திய சாதனைகள் சில

1) மும்பையில் ஒற்றை குதிரை வண்டியை ஒழித்தது

பாம்பே  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2015, ஜூன் மாதம், 8-ஆம் தேதி தீர்ப்பை பெற்று ஒரு வருடத்திற்குள் ஒற்றை குதிரை வண்டியை அகற்ற ஏற்பாடு செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜல்லிக்கட்டை ஒழிக்க முயன்றது.

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹிண்டன் ஃபாலிநாரிமன் முன்னிலையில் 7, மே,2014 அன்று பீட்டாவுக்காக ராஜ் பஞ்வானி(raj panjwani) 

                                   Raj panjwani

ஆஜராக்கி ஜல்லிக்கட்டு தடை வாங்கியது.அதன்பின் மத்திய அரசு 2016-இல் ஜல்லிக் கட்டு நடத்த கொண்டு வந்த அறிக்கைய உச்சநீதிமன்றத்தை விலங்கு நல வாரியத்துக்காக அரியமா சுந்தரமும், பீட்டாவுக்கு ஆனந்த் குரோவரும், FIAPOவுக்கு 

அரியமா சுந்தரம்
ஆனந்த் குரோவர்

 வேணுகோபாலும், சித்தார்த் லூத்ராவும், People for Animalsக்கு துஷ்யந்த் தேவும் ஆஜராகி தமிழனின் பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு எதிரான தீர்ப்பை பெற பாடுபட்டவர்கள் 

இந்திய தலைமை அலுவலகம்
PO Box 28260 Juhu, Mumbai – 400 049
91-22-4072 7382, 91-22-2636 7383(fax)
மொபைல்
+91 9004547382
+91 9167907382
மின்னஞ்சல்
Info@petaindia.org,media@petaindia.org,.WhistleBlower@petaindia.org.

சென்னை உதவியாளர்கள்
ஸ்வேதா ப்ரியா +91 9884459233
சாம்பவி திவாரி +91 9167907382
லாவண்யா நெதலா +91 9581266774
புவணேஸ்வரி குப்தா +91 9167937382; 
பெனேசீர் சுரையா +91 9004547382



Monday 2 January 2017

குடியம் குகை (Gudiyam Cave) ஆதிமனிதன் / கற்கால மூத்தகுடி வாழ்ந்த இடம்




குடியம் குகை  தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ளது. இது ஒரு தொன்மையான வரலாற்றுக் குகைவாழிடம் ஆகும். சென்னையிலிருந்து 70 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இக்குகையானது தொல்லியல் ஆய்வாளரான இராபர்ட் புருசு ஃபூட்டால் (Robert Bruce Foote) கண்டுபிடிக்கப்பட்டது.


மே 30, 1863 – அன்று இந்திய தொல் பழங்கால வரலாற்றின் பொன் நாள். பனியுக காலத்திலும், இந்தியாவில் மனிதன் வாழ்ந்ததற்கான தடயம் கிடைத்த நாள் ஆகும். ராபர்ட் புரூஸ் பூட் எனும் வரலாற்று ஆராய்ச்சியாளர், சென்னை, பல்லாவரம் பகுதியில், பழைய கற்கால கருவியை முதன்முதலில் கண்டெடுத்த நாள்.


ராபர்ட் புரூஸ் பூட்



சோபியா வெல்ஸ் ஃபூட்(Sophia Wells Foote) வில்லியம் ஹென்றி ஃபூட் (William Henry Foote) தம்பதிகளுக்கு மகனாக 22,செப்டெம்பர், 1843 தேதி பிறந்தார். 1857-ஆம் வருடம் தாமஸ் ஓல்ஹமால்(Thomas Oldham) இந்திய நிலவியல் துறையில் பணியமத்தி மெட்ராஸ் மாகணத்துக்கு அனுப்பினார்.



கடந்த 1858, செப்டம்பர் மாதம், தன், 24வது வயதில், மத்திய நிலவியல் ஆய்வுத் துறையில், நில அளவையாளராக தன் பணியைத் துவக்கினார். 33 ஆண்டுகள் பணிபுரிந்து, 1891ல், முதுநிலை கண்காணிப்பாளராக ஓய்வு பெற்றார். இவரது ஆய்வு முழுக்க, முழுக்க சென்னை மாகாணத்திற்கு உட்பட்டே நடந்துள்ளது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

இவரது முதல் ஆய்வு, சென்னை பல்லாவரம் பகுதியில் துவங்கியது. இங்கு, கற்கால மனிதர்கள், கற்களையே ஆயுதங்களாக பயன்படுத்தினர் என்பதை கண்டறிந்து, உலகிற்கு தெரியப்படுத்தினார். அதன்பின், திருவள்ளூர் மாவட்டம் (அப்போ
தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தது) பூண்டி நீர்தேக்கத்திற்கு அருகே அத்திரம்பாக்கம் ஓடைப்பகுதி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார்.

ராபர்ட் புரூஸ் பூட், தென் இந்தியத் தீபகற்ப பகுதியில் கண்டுபிடித்த, 459 வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பகுதிகளில், 42 பகுதிகள் பழைய கற்காலத்தையும், 252 பகுதிகள் புதிய கற்காலத்தையும் சார்ந்தவை. திருநெல்வேலி மாவட்டத்தில், தேரி பகுதிகளில் நுண்கற்காலக் கருவிகளை கண்டெடுத்து, அப்பகுதியில் நுண்கற்கால தொழிற்சாலை இருந்தமையை உறுதிப்படுத்தியுள்ளார். பழைய கற்கால, புதிய கற்கால கல் ஆயுதங்களை, அதன் உருவமைப்பு மற்றும் தொழில் நுட்ப முறையைக் கொண்டு வகைப்படுத்தும் பணியை மேற்கொண்டார். தென் இந்தியாவில் பழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடையேயுள்ள நீண்ட இடைவெளியைக் கண்டறிந்து, அதற்கான காரணத்தை அறியும் பொருட்டு மேற்கொண்ட அவரது ஆய்வு சிறப்பு வாய்ந்தது.

சென்னை, மைசூர், ஐதராபாத், பரோடா பகுதிகளில், இவரால் சேகரிக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட தொல் பொருட்கள், 1904ல், சென்னை அருங்காட்சியத் துறையால் வாங்கப்பெற்று, அதற்கென தனி காட்சியறை, தொல்லியல் பிரிவில் நிறுவப்பட்டது. அறிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்து, பல தொல்லியல் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, "இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை' என்றழைக்கப் பட்ட ராபர்ட் புரூஸ் பூட், டிச.,29, 1912ல், இயற்கை எய்தினார். 
ஏற்காடு புனித ட்ரினிடி சர்ச்சில் (Holy Trinity Church, Yercaud) இவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை ((The Father of Indian Prehistory) என்று, வரலாற்று அறிஞர்களால் அழைக்கப்படுகிறார்.

தொல்லியல் ஆய்வுச் சான்றுகளின்படி இக்குகைகள் பழைய கற்கால மனிதர்களின் வாழிடங்களாக இருந்தவையெனக் கருதப்படுகின்றன. இந்தியத் தொல்லியல் அகழ்வாய்வுத் துறையினரால் இவ்விடம் 1962-64 ல் அகழ்வாய்வு செய்யப்பட்டது.

தொல் பழங்காலத்தைப் பற்றி மட்டும் தனியாக விளக்கும் வகையில் அமைந்துள்ள தொல்லியல் அகழ்வைப்பகம் இந்தியாவிலேயே இது ஒன்றுதான். இந்தியாவிலேயே பூண்டிக்கு அருகில் உள்ள அதிரம்பாக்கத்தில் தான் அதிக அளவில் பழைய கற்கால கருவிகள் கிடைத்திருப்பதால் இந்த அகழ்வைப்பகத்தை இப்பகுதியில் அமைத்துள்ளனர்.
இங்கு பழைய கற்கால (Paleolithic Age) கருவிகள் உரிய விளக்கங்களுடன் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல நுண்கற்காலம் (Microlithic Age), புதிய கற்காலம் (Neolithic Age), பெருங்கற்காலம் (Megalithic Age) ஆகியவற்றைச் சேர்ந்த பிற தொல்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அகழ்வைப்பகத்தில் ஆதிமனிதர்களின் / கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பலவகை கைக்கோடாரிகள், கிழிப்பான்கள், சுரண்டிகள், வட்டுகள், துளைப்பான்கள், சிறு கத்திகள், அம்பு முனைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அகழ்வைப்பக கட்டடத்திற்கு வெளியே 'தொல்மாந்தர் வாழ்வகம்' என்ற பெயரில் பழைய கற்கால மனிதர்களின் ஆளுயர மாதிரி சிலைகள் நான்கும், பாறை குகை மாதிரி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 

மே 30-ம் தேதி இந்தியாவில் பனியுகக் காலத்திய மனிதன் வாழ்ந்ததற்கான அடையாளம் கண்டறியப்பட்ட நாள். 

CP சரவணன், வழக்கறிஞர்