Tuesday 14 May 2019

"தமிழர் பண்பாட்டில் தாலி"




தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு ஆகும். தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது. பெண்ணிய பார்வையில் ஆண்கள் தாம் திருமணமானவர். என்பதை வெளிப்படுத்த எந்தவொரு குறியீடும் இல்லாமல் பெண்ணிடம் தாலி, குங்குமம், மெட்டி என்று குறியீடுகளைத் திணிப்பது ஒர் ஆண் ஆதிக்க செயற்பாடாக பார்க்கப்படுகிறது.

"சங்க காலத்தில் தாலி"
👇👇👇👇👇👇👇👇👇
மகளிர் அணிந்த தாலி வேப்பம்பழம் போல இருந்தது. இந்தத் தாலியைப் "புதுநாண்" என்றனர்.
(அள்ளூர் நன்முல்லையார்- குறுந்தொகை 67)
தாலி அணிந்த பெண்களை வெள்ளிவீதியார் "வாலிழை மகளிர்" என்று குறிப்பிடுகிறார்.
( குறுந்தொகை 386)

பெயர் வர காரணம்
👇👇👇👇👇👇👇👇
தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர்.
பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயினும் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். (இயல் மஞ்சளை எடுத்து வெய்யிலில் காயவைத்து நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள் கயிறு கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.
இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது. சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை – மண அடையாள வில்லையைக் குறிக்கும்.

தாலி கட்டப்படும் முறை
👇👇👇👇👇👇👇👇👇

கூறை உடுத்தி வந்த மணமகள் மணமகனின் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி அமர்வார். குறித்த சுபமுகூர்த்ததில் மணமகன் எழுந்து மணமகளின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதிதுக் கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதித்து கொடுக்கும் மாங்கல்யத்தை (தாலி) இரு கரங்களால் பற்றி கெட்டிமேளம் முழங்க, வேதியர் வேதம் ஓத, மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க மணமகன் மேற்கு திசை நோக்கி திரும்பிப் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது சொல்லப்படும் மந்திரம்
“மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்”
பொருள்:-👆👇
"ஓம்! பாக்கியவதியே யான் சீரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக"
என்று குருக்கள் கூறும் மந்திரத்தை மனதில் கொண்டு தாலி முடிச்சில் திருநீறு இட்டு தனது இடத்தில் இருக்க வேண்டும். மணமகளின் உச்சந்தலையில் குங்குமத்தில் திலகமிட வேண்டும்.
மற்றும் தற்காலத்தில் தாலிகள் பல வகைப்படுகிறது ஒருவருடைய ஜாதக பொருத்தத்திற்கு தகுந்தால் போல் தாலியின் வகை தீர்மானிக்கப்படுகின்றது

Monday 1 April 2019

திருநீறு, சந்தனம், குங்குமம்



திருநீறு

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காய வைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடிபுடம் போட்டுஎடுக்கவேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்துநீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்த வகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக்கொள்ளும் வழக்கம் சைவ, வைணவ மதத்தவர்களிடம் காணப்படுகின்றது. மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக்கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள்இழுக்கவும் பயன்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறைநெற்றியில் இடுவார்கள்.

மனிதன் தன்மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான் .பசுமாட்டுச் சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடுஅறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது. இதைவிட இருபுருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிகநுண்ணிய நரம்பு அதிர்வலைகள் உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன.






சந்தனம்

சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற. நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது. சந்தனம் இரு புருவங்களுக்கு ம்இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் Hippo campus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மன ஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப்பொட்டு குளிர்ச்சியுடன் இருக்கச் சந்தனம் சரியான மருந்து.

குங்குமம்

மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமி நாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்திவாய்ந்தது நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும். ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு, நம் கபாலத்தில் உள்ள சிந்தனை நரம்புகளின் முடிச்சு இருபுருவங்களுக்கு இடையில் உள்ளது. மனிதன் அதிகமாக சிந்திக்கும் போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி தலைபாரம்தலைச்சுற்றல் ஏற்படும். மனஉளைச்சல் ஏற்பட்டுத் தன்நிலை மறக்கவேண்டிய சூழ்நிலை உருவாகி பல விரும்பத் தாகத விளைவுகள் ஏற்படும்.

ஆகவே அந்த நரம்புமண்டலம் குளிர்ச்சியாக இருக்கவேண்டும்.சந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு. எனவே அந்த நரம்புமண்டலம் குளிர்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காகச் சந்தனம் பூசி, சந்தனம் காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம். இவற்றைத் தரித்தால் புத்துணர்வும், புதுத்தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன. மனிதனின் உடற்கூறுக்கு உகந்த முறைகளைத் தான்நாம் இறைவழிபாடுகள் மூலம் அடைகிறோம்.

Saturday 30 March 2019

தமிழிசை நூல்கள்



தமிழிசை நூல்கள்

இசை நூல்களைப் பொதுவாகப் பாடுதுறை சார்ந்தவை, இசையியல் துறை சார்ந்தவை என இரு வகைப்படுத்தலாம். தமிழ் நாட்டுச்சூழலில் பாடுதுறை சார்ந்த நூல்கள் கடந்த இருநூறு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கில் பதிப்பிக்கப்பட்டுள்ளனஇருப்பினும், அவை பெரும்பாலும் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் அமைந்த கிருதிகளையும் கீர்த்தனைகளையும் உள்ளடக்கியவைகளே. இசை இயல் தொடர்பாக வெளியான நூல்களும் அவ்வாறே அமைந்தவை. 15ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை தமிழிசை ஆராய்ச்சியில்லாத இருண்ட காலம் எனலாம்; ஆனால் அதே சமயம் தமிழிசைப் பாடல்கள் ஆயிரக்கணக்கில்  இயற்றப்பட்டு   பாடுதுறைக்கான  பொற்காலமாக விளங்கியது.

இசைநுணுக்கம் (Isai Nunukkam) என்பது கபாடபுரம் என்னும் பாண்டியர்களின் இடைச்சங்கத் தலைநகரில் அரங்கேறிய ஒரு இசை இலக்கண நூலாகும். தெய்வப் பாண்டியன் மகன் சாரகுமாரன் இசையறிதல் பொருட்டு அகத்தியரின் 12 மாணாக்கர்களில் ஒருவனான சிகண்டிசெய்த நூல் இசைநுணுக்கம். மேலும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் கூத்தநூல்கள்,

கூத்தநூல்
இந்திரகாளியம்
பஞ்சமரபு
பரதசேனாபதியம்
நாடகத்தமிழ்நூல்

தமிழிசை ஆதாரங்கள் பட்டியல் [காலம் கணிக்க முடியாதவை]
தமிழ் நாட்டார் பாடல்கள்
சித்தர் பாடல்கள்

சங்க காலம் (கிமு 500  கிபி 300)

தொல்காப்பியத்தில் தமிழிசை
கூத்த நூல் (தாள நூல், இசை நூல்) (இன்று மூலம் முழுமையாகக் கிடைக்கவில்லை)
பரிபாடல்
புறநானூற்றில் தமிழிசை
அகநானூற்றில் தமிழிசை
பத்துப்பாட்டு
பெருநாரை (இன்று மூலம் கிடைக்கவில்லை)
பெருங்குருகு (இன்று மூலம் கிடைக்கவில்லை)
தேவவிருடிநாரதன் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
பேரிசை
சிற்றிசை
இசைமரபு
இசைநுணுக்கம் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
பஞ்சமரபு (இன்று மூலம் முழுமையாகக் கிடைக்கவில்லை)
பஞ்சபாரதீயம் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
பரதசேனாபதீயம் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
மதிவாணர் நாடகத்தமிழ் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
தாளவகை ஒத்து  (இன்று மூலம் கிடைக்கவில்லை)
யாப்பருங்கால விருத்தியுரை

சங்கம் மருவிய காலம்
சிலப்பதிகாரத்தில் தமிழிசை
மணிமேகலை
சீவக சிந்தாமணி
காரைக்கால் அம்மையார் பாடல்கள்
குடுமியான்மலை இசைக் கல்வெட்டு
திருமந்திரம்
பக்தி காலம் (700  1200)
திவாகர நிகண்டு
பிங்கலம்
தேவாரங்கள்
அப்பர்
திருஞான சம்பந்தர்
சுந்தரர்
கல்லாடம்
திருவாசகம்
நாலாயிரத்திவ்ய பிரபந்தம்
பெரியபுராணம்
திருவிளையாடற்புராணம்
10 ம் நூற்றாண்டு  இடைக் காட்டுச்சித்தர் பாடல்கள்
10 ம் நூற்றாண்டு  பட்டினத்தார்
இடைக் காலம் (1200 1700)
திருப்புகழ்
குமரகுருபரர் படைப்புகள்
முத்துத் தாண்டவர் பாடல்கள்
18 ம் நூற்றாண்டு
தாயுமானவர் பாடல்கள்
சதுரகராதி
அருணாசலக் கவிராயர் பாடல்கள்
மாரிமுத்துப் பிள்ளை பாடல்கள்
திரிகூடராசப்பக் கவிராயர்  குற்றாலக் குறவஞ்சி
19 ம் நூற்றாண்டு
சுப்பராம ஐயர் பதங்கள்
கவிகுஞ்சர பாரதியார் படைப்புகள்
கோபாலகிருட்ண பாரதியார் படைப்புகள்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை படைப்புகள்
அண்ணாமலை ரெட்டியார் படைப்புகள்
இராமலிங்க அடிகளார் படைப்புகள்
நந்தனார் சரித்திரம்

20 ம் நூற்றாண்டு
1917  ஆபிரகாம் பண்டிதர்  கருணாமிர்த சாகரம்
1930  மதுரை பொன்னுசாமிப்பிள்ளை  பூர்வீக சங்கீத உண்மை
பாரதியார் பாடல்கள்
பாரதிதாசன் பாடல்கள்
1947  விபுலாநந்தர்  யாழ் நூல்
1940  செல்வி ஜசக்  பழந்தமிழிசை (ஆய்வேடு)
கண்ணதாசன் பாடல்கள்
புதுவை இரத்தினதுரை பாடல்கள்
. வெள்ளை வாணர்  இசைத்தமிழ் (நூல்)
கு. கோதண்டபாணியார்  பழந்தமிழிசை (நூல்)
. இராகவன்  இசையும் யாழும்
வீ. பா. கா சுந்தரம்  பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்
1984  பி. டி. செல்லத்துரை  தென்னக இசையியல்
1992  வீ. . கா. சுந்தரம்  தமிழிசைக் கலைக்களஞ்சியம்
நா. மம்மது  தமிழிசைப் பேரகராதி
21 ம் நூற்றாண்டு
2009  மு. அருணாசலம்  தமிழ் இசை இலக்கண வரலாறு (நூல்)
2009  மு. அருணாசலம்  தமிழ் இசை இலக்கிய வரலாறு (நூல்)

ஆங்கில ஆதாரங்கள்
Musical tradition of Tamilnadu
Heritage of the Tamils: art & architecture
1975  The Poems of Ancient Tamil, Their Milieu and Their Sanskrit Counterparts (இன்னூலில் தமிழின் செய்யுள் மரபும் இசை மரபும் மராட்டியின் மூத்த மொழியான மகராட்டிரப் பிராக்கிருதத்தின் மீதும், அதன்வழியாக சமக்கிருத இலக்கியத்தின்மீதும் பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதைச் சான்றுகளுடன் காட்டியுள்ளார் பேரா.சியார்ச்சு ஆர்ட்டு.)
2008  Yoshitaka Terada  Tamil Isai as a Challenge to Brahmanical Music Culture in South India  (ஆங்கில ஆய்வுக் கட்டுரை)


ஏறத்தாழ 5000 ஆண்டுகள் தொன்மையுடையது தமிழிசை ஆயினும், தமிழிசை குறித்த நூல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது அனைவரும் அறிந்த உண்மைஇடைச் சங்க காலத்திலும் கடைச் சங்க காலத்திலும் சிறந்து விளங்கிய இசை நூல்களும் காலப்போக்கில் மறைந்து விட்டனதொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் இலக்கியங்களிலும் திருமுறைகளிலும் பிற இலக்கிய நூல்களிலும் ஆங்காங்கே பதிவாகியுள்ள குறிப்புகள், செய்திகளின் அடிப்படையில் தமிழிசையின் வரலாற்றையும் இலக்கணத்தையும் படைக்கும் முயற்சிகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாயின. 1892 ஆம் ஆண்டில் தமிழ்த்தாத்தா .வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பட்ட சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும் என்னும் நூலே இம்முயற்சிகளுக்கு மூலமாகவும் அடிப்படையாகவும் விளங்கியது. இதற்குத் துணை நூல்களாக . வே. சா. பதிப்பித்தபத்துப்பாட்டு மூலமும் உரையும்   (1889) புறநூனூறு (1894) ஆகியன அமைந்தன.


கி.பி. 1917 ஆம் ஆண்டு தஞ்சாவூர் ராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் தமிழிசையின் தொன்மை வரலாற்றை முதன் முதலாக விவரித்துகருணாமிர்தசாகரம்’  என்னும் மிகப் பெரிய நூலைப் பதிப்பித்தார். பல நூற்றாண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழிசை குறித்து வெளிவந்ததால் தற்கால இசைநூல்களுள் இதனையே முதல் நூலாகக் கொள்ள வேண்டும், தமிழிசையியல் என்னும் பெருங்கடலில் பயணம் செய்வோருக்குக்கருணாமிர்த சாகரம்ஒரு கலங்கரைவிளக்கமாகும்.
தமிழிசை பற்றித் தமிழில் ஒன்றுமில்லைஎன்று கருதிய காலம் பண்டிதரின் காலம்


இதனைப் பண்டிதர், ‘சங்கீதத்திற்கு சங்கீத ரத்னாகரர் எழுதிய நூலே முதல் நூலென்றும், அது சிறந்ததென்றும், தமிழ்மக்களுக்குச் சங்கீதமே தெரியாதென்றும் சொல்லுகிறார்கள்என்று வேதனையுடன் குறிப்பிடுகின்றார். இக்குறையைக் போக்கும் வகையில், பல ஆண்டுகள் இசை பயின்றும், இசை நூல்களைக் கற்றும், இசையறிஞர்களோடு கலந்துரையாடியும் பழந்தமிழ்ப் பனுவல்களைத் திரட்டியும் தமிழிசை குறித்த நீண்ட வரலாற்றையும், நுணுக்கங்களையும் ஆய்ந்து அறிந்து கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டார்.

1917 இல் வெளிவந்த இந்நூல் பெருந்தாளில் கால் அளவினதாய் 1346 பக்கங்களில் அமைந்து, நான்கு பாகங்களைக் கொண்டு, மூன்று தமிழ்ச்சங்கங்கள், குமரிக் கண்டம், கடல் கோள் ஆகியன குறித்துப் பல்வேறு சான்றுகளுடன் மிகவும் விரிவாக விளக்குகின்றது. மேலும், அக்காலத்தில் வாழ்ந்த இசைப்புலவர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது.


இரண்டாம் பாகம் சுருதிகளைப் பற்றி விளக்குகின்றது. இசைக்கான சுருதிகளின் எண்ணிக்கை 24 என்றும், 22 சுருதிகள் என்னும் இசையியல் கொள்கை தவறு என்றும் பல்வேறு நிலைகளில் விவாதித்து முடிவுரைக்கின்றது. இப்பகுதி இசை இயற்பியல் பற்றியது.


மூன்றாம் பாகத்தில் தமிழிசையியல் குறித்த பல செய்திகள் கிடைக்கின்றன. பெரும் பண்கள், திறப்பண்கள், பண்ணுப் பெயர்த்தல், ஆலாபனை, முற்காலப் பிற்கால நூற்களில் கூறியுள்ள இராகங்களின் தொகை, இணை, கிளை, பகை, நட்பு என்னுமட் பொருந்திசைச் சுரங்களைக் கண்டு கொள்ளும் முறைகள் ஆகியன பற்றி சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் வழி நின்று விளக்கப்படுகின்றது.


நான்காம் பாகத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட வட்டப்பாலை, ஆயப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை, குறித்தும், மாந்தன் உடலுக்கும் யாழ்வடிவுக்கும் ஓப்பீடு, யாழ் வகைகள் குறித்தும் விளக்குகின்றது.


தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியம், பிற இலக்கியங்கள் வழிப் பெற்ற சான்றுகளின் அடிப்படையிலும் பிறமொழி நூல்கள், வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையிலும் மிகவும் ஆழ்ந்து ஆய்வு செய்து எழுதப்பட்டது இப்பெருநூல். இந்நூலின் மறு பதிப்பு 1994ஆம் ஆண்டில் அன்றில் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.  


புகழ் பெற்ற  நாதசுர மேதை மதுரை பொன்னுசாமிப் பிள்ளை எழுதியபூர்வீக சங்கீத உண்மை’ (1930) என்னும் நூல் மிகவும் குறிப்பிடத்தக்கது. பெரும்பண்கள், கிளைப்பண்கள், சுர அமைப்புகள், இசை நுணுக்கங்கள், ஆகியன குறித்து மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து எழுதப்பட்ட நூல். இந்நூல், தமிழிசை இலக்கண மரபு வழி நின்று, கர்நாடக இசையில் வழங்கிவரும் 72 மேளகர்த்தா இராகங்களைத் தர்க்கரீதியாக நிராகரித்து, அவற்றுள் 32 மேளகர்த்தாக்கள் மட்டுமே பெரும் பண்கள் என நிறுவ முனைந்தது. இசை வரலாற்றில் இந்நூல் மிகப்பெரிய சிந்தனைப் புரட்சியைத் தோற்றுவித்தது. ஆனால், தமிழிசை ஆய்வு வரலாற்றில் இவருக்கு உரிய இடம் இல்லாமல் போனது பெரும் விந்தையே


அடுத்து, பல்லாண்டு கால ஆராய்ச்சியின் பயனாக சுவாமி விபுலானந்தர் படைத்த யாழ் நூல் மிக முக்கிய இடம் பெறுகிறது. 1947இல் நச்சாந்துபட்டி சிதம்பரம் செட்டியாரின் பொருளுதவியால் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் 1947இல் வெளியிடப்பட்டதுஇந்நூலின் பெயர்யாழ் நூல் என்னும்  இசைத்தமிழ் நூல்என்றே ஆசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளதுஎனவே, இந்நூல் யாழ் பற்றி மட்டுமின்றி  இசைத்தமிழின் பல்வேறு கூறுகளைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கும் நூல் என்பதை நன்கு உணரலாம்பாயிரவியல்யாழுறுப்பியல், இசை நரம்பியல், பாலைத்திரிபியல், பண்ணியல், தேவாரவியல், ஒழிபியல் என்னும் ஏழு இயல்களையும் பல அரிய தகவல்களை உள்ளடக்கியசேர்க்கைஎன்னும் பகுதியையும் உடைய யாழ் நூல் இசைத்தமிழின் அனைத்துக் கூறுகளையும் அலசி ஆராய்கின்றது. யாழ் வகைகள் முழுப்பக்கப் படங்களாகவும் யாழின் உறுப்புகள் சிறு படங்களாகவும் மிகவும் நேர்த்தியாக  வெளியிடப்பட்டுள்ளன.  


 தமிழ் நூல்களை மட்டுமே சான்றாதாரங்களாகக் கொள்ளாமல்கல்வெட்டுகள், ஓவியங்கள், சிற்பங்கள் எனப் பல்வேறு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு  எழுதப்பட்ட நூல்.  5000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த யாழ்க் கருவியின்  படம்  தரப்பட்டுள்ளது சிறப்பாகும். இசைத்தமிழ் ஆய்வாளர்களுக்கு இந்நூல் ஓர் அரிய கருவூலமாகும். இதன் இரண்டாம் பதிப்பு 1974இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தாலேயே  வெளியிடப்பட்டதுமூன்றாம் பதிப்பும் அண்மையில் வெளிவந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.  

தொடர்ந்து, 1950ஆம் ஆண்டு ஆபிரகாம் பண்டிதரின் புதல்வர் வரகுண பாண்டியன்பாணர் கைவழி என்னும் யாழ் நூல்என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் யாழ் பற்றிய பல்வேறு செய்திகளை வெளிப்படுத்தியதுடன் வீணை குறித்தும் விளக்குகின்றது. 1956இல் வெளிவந்த பண்ணாராய்ச்சி வித்தகர் .சுந்தரேசனாரின்ஐந்திசைப் பண்கள் மிக முக்கியமான தமிழிசை ஆவணமாகும். சிறந்த இசைக் கலைஞரான முனைவர் எஸ். இராமநாதன் எழுதி வெளிக்கொணர்ந்தசிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம் என்னும் நூல் தமிழிசை வரலாற்றில் தடம் பதித்த நூலாகும். சிலப்பதிகாரத்தில் உள்ள அரிய இசையியல் செய்திகளைப் பெரிதும்  முயன்று ஆழமாக வெளிப்படுத்தியதில் இந்நூலாசிரியர்  குறிப்பிடத்தக்கவர்.   இவருடைய  மற்றொரு நூல்சிலப்பதிகாரத்து இசைத்தமிழ்’(1981). இவ்விரு நூல்கள் வாயிலாகத் தமிழிசை ஆய்வுகளுக்குப் புதிய வெளிச்சம் பாய்ச்சியதுடன் பாடுதுறை நோக்கில் பழந்தமிழ் இலக்கியங்களை வாசிப்பதற்கான ஒரு புதிய அணுகு முறையையும் உருவாக்கினார் எஸ்.இராமநாதன். செம்பாலை, முல்லைப்பண், சாதாரி, இந்தளம் ஆகிய பண்கள் குறித்து உறுதியான முடிவுகளை இந்நூல்கள் தந்தனஇவருடைய மற்றொரு நூல்தமிழகத்து இசைக் கருவிகள். இவை தவிர, பாடுதுறை சார்ந்த நூல்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளார்.  


1959இல் வெளிவந்த கு. கோதண்டபாணி பிள்ளையின்பழந்தமிழ் இசை பல அரிய செய்திகளை உள்ளடக்கிய நூலாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க நூல்இசையும் யாழும்’ (1971);  இந்நூலை எழுதியவர் சாத்தான்குளம் .இராகவன். தமிழிசையின் தொன்மையான வரலாற்றையும் சிறப்புகளையும் எடுத்துக்கூறுவதோடு நில்லாது, தமிழிசையின் சமகாலப் பிரச்சினைகளையும் பேசுகின்றது இந்நூல். வெறும் புகழுரைகள் மட்டுமின்றி விமர்சனங்களையும் முன்வைத்தது இந்நூலாசிரியரின் சிறப்புவிபுலானந்தரின் மாணவரான .வெள்ளைவாரணன் எழுதியஇசைத்தமிழ்’  1979ஆம் ஆண்டு வெளிவந்தது. தாளக்கருவிகளைப் பற்றி ஆர். ஆளவந்தார் எழுதியதமிழர் தோற்கருவிகள்(1981) என்னும் நூல் சிறந்த ஒன்றாகும்.  


இசைத்தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தமிழிசையின்  பல்வேறு கூறுகளையும் 2500 ஆண்டு கால வரலாற்றையும் ஒரே நூலில் படித்துப் பயன் பெறும் வகையில் 1984ஆம் ஆண்டு வெளிவந்த நூல்தமிழர் இசை; இந்நூலின் ஆசிரியர்  பேராசிரியர் .என்.பெருமாள்; சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. தொல் பழங்காலம் தொடங்கி தமிழ்த் திரைப்பட இசை வரையிலுமான தமிழிசை குறித்த செய்திகள் ஆய்ந்தறியப்பட்டு  ஏறத்தாழ 900 பக்கங்களில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.   


ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்ததமிழிசைக் கலைக்களஞ்சியம் ஒன்று 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் வெளிவந்தது. தம் நெடிய வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழிசை ஆய்விற்கே அர்ப்பணித்த, முதுபெரும் தமிழறிஞரும் இசையறிஞருமாகிய, பேராசிரியர் வீ..கா.சுந்தரம்  அவர்களால் உருவாக்கப்பட்டு,   திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அதனை நான்கு தொகுதிகளாக (1992, 94, 97, 2000) வெளியிட்டது. இந்நான்கு தொகுதிகளின் மறுபதிப்பு 2006ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். தமிழிசைக் கலைக்களஞ்சியம் மொத்தம் 2232 தலைப்புச் சொற்களையும் 500க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் கொண்டது. பல கலைச்சொற்களுக்கு வேர்ச்சொல் விளக்கங்களும், உரைஆசிரியர்கள், இசைக் கலைஞர்கள், இசையியலார்கள், பாடல் புனைந்தோர் ஆகியோர் பற்றிய குறிப்புகளும், நாட்டியம், நாடகம், நாட்டுப்புறக்கலைகள் பற்றிய செய்திகளும் விரிவாகத் தரப்பட்டுள்ளனதொல்காப்பியம், சங்க இலக்கியம், தேவாரம் தொடங்கிஇருபதாம்  நூற்றாண்டு  இலக்கியங்கள் வரை அனைத்து நூல்களிலும் காணப்படும் இசைச் செய்திகளும் இக் களஞ்சியத்தில் முறையாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இன்றைய இசைத் துறை சார்ந்த அனைவருக்கும் இக் களஞ்சியம் ஓர் அரிய கருவூலமாகத் திகழ்கிறது


தமிழிசைக்கு வீ..கா.சுந்தரம் அளித்துள்ள மற்றொரு கொடை  அவர் எழுதிய, ‘பஞ்சமரபு விருத்தியுரையாகும். அறிவனார் எழுதியபஞ்சமரபுஇடைச்சங்க காலத்தைச் சேர்ந்த மிக முக்கியமான இசை நூலாகும். பழந்தமிழிசை  நூல்களுள் நமக்குக் கிடைத்திருப்பது இந்நூல் ஒன்றேயாகும். அருட்செல்வர் மகாலிங்கம் நல்கிய பொருளுதவியுடனும் ஆதரவுடனும்அறிவனாரின் பஞ்சமரபு(1993) வீ..கா.சு. எழுதிய விருத்தியுரையுடன் கழகப் பதிப்பாக வெளிவந்தது. தமிழிசையின் தொன்மைக்குச் சான்று பகரும் இந்நூல் மிக முக்கியமான ஆவணமாகும்


1917இல் வெளிவந்த கருணாமிர்தசாகரத்திற்குப் பின் தமிழிசை ஆய்வுகளில் புதிய தேடல்களையும், எண்ணங்களையும் , ஆய்வுப் போக்குகளில் பெரும் மாற்றங்களையும் வீ..கா.சு. தம்முடைய கீழ்க்காணும் நூல்களின் மூலம் ஏற்படுத்தினார். ‘தமிழிசை வளம்(1985),  ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்(1986), ‘தமிழிசையியல்’(1994), ‘தொல்காப்பியத்தில் இசைக்குறிப்புகள்’(1994),பழந்தமிழ் இலக்கியத்தில் தாளமுழக்கியல் (1995). 

வீ..கா.சுந்தரம் நூல்களின் வருகையைத் தொடர்ந்து, இசைத்துறை ஆய்வாளர்களிடமிருந்து  வெளிவந்த குறிப்பிடத்தக்க நூல்கள் பின்வருமாறு
வா.சு. கோமதிசங்கர ஐயர், திருஞானசம்பந்தர் அளித்த யாழ்முரிப் பண், 1977.
இசைத்தமிழ் இலக்கண விளக்கம், 1984. 
து..தனபாண்டியன், நுண்ணலகுகளும் இராகங்களும், 1987. 
இசைத்தமிழின் வரலாறு (மூன்று பகுதிகள்), (எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டுப் பதிப்பு)
. அங்கயற்கண்ணி, திருப்புகழ்ப் பாடல்களிற் சந்தக்கூறுகள், 1989. 
பஞ்சமரபில் இசை மரபு, 1989. 
திருஞான சம்பந்தரின் தேவாரப்பாடல்களில் இசை, 1999.
ஞானாம்பிகை குலேந்திரன், பழந்தமிழரின் ஆடலில் இசை, 1990.
.தண்டபாணி, தமிழன் கண்ட இசை, 1983.
திராவிடர் இசை, 1993.
புரட்சிதாசன், தமிழிசையில் சாமகானம், 1992.
இரா.திருமுருகன், சிந்துப் பாடல்களின் யாப்பிலக்கணம், 1993.
இரா. இளங்குமரன், தமிழிசை இயக்கம், 1993.
வெற்றிச் செல்வன், இசையியல், 1986, 1994.
சேலம் எஸ்.ஜெயலட்சுமி, சிலப்பதிகாரத்தில் இசைச் செல்வங்கள், 2000.
மார்கரெட் பாஸ்டின், இன்னிசைச் சிலம்பு, 2000.
இன்னிசை யாழ், 2006.
இரா.கலைவாணி, சங்க இலக்கியத்தில் இசை, 2005, சு.தமிழ்வேலு 



'இசைத்தமிழ் ஆராய்ச்சியாளர்கள்'அரசியல் பொருளாதார கலாச்சார மாற்றங்களுக்கு இடையில் தமிழிசை தன்னில் புதுமைகளைப் புகுத்தவும் அவற்றை மேலும் போளிவுபடுத்தவும் அண்ணாமலை அரசர் அவர்களால் 1943 இல் தமிழிசை இயக்கம் தொடங்கப்பட்டது. சர். ஆர். கே சண்முகம் செட்டியார், கோவை சி. எஸ். இரத்தினசபாபதி முதலியார், இரசிகமணி டி. கே. சி , கல்கி ஆகியோர் தமிழிசை இயக்கத்தை முன்னின்று செயல்படுத்தினார்கள்.

ஆராய்ச்சியாளர்கள்
பல்வேறு காலகட்டத்தில் அறிஞர் பலர் இசைத்தமிழ் பற்றி ஆய்வு செய்துள்ளனர்.

அண்ணாமலை ரெட்டியார் -- காவடிச் சிந்து
ஆபிரஹாம் பண்டிதர் -- கருணாமிர்தசாகரம்
விபுலானந்த அடிகள் -- யாழ் நூல்
டாக்டர் எஸ். இராமநாதன் -- சிலப்பதிகாரத்து இசைநுணுக்க விளக்கம்.
கு. கோதண்டபாணியார் -- பழந்தமிழிசை
. இராகவனார் -- இசையும் யாழும்
வரகுண பாண்டியர் -- பாணர் கைவழி
குடந்தை சுந்தரேசனார் -- முதல் அய்திசைப்பண் .
வீ. . கா. சுந்தரம் -- தமிழிசைக் கலைக் களஞ்சியம்
பேராசிரியர். பி. சாம்பமூர்த்தி -- தெனிந்திய சங்கீதமும் சந்கீதக்காரர்களும்
. என். பெருமாள். -- தமிழர் இசை
. ஜான் ஆசிர்வாதம் -- தமிழர் கூத்துகள்
ஆர். ஆளவந்தார் -- தமிழர் தொல்கருவிகள்
பேரா து. . தனபாண்டியன் இசைத்தமிழ் வரலாறு


தமிழில் நாடக இசை பற்றிய முன்னோடி ஆய்வுகளாக இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. அவை, பேராசிரியர் அரிமளம் பத்மநாபன் எழுதி வெளியிட்டதவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் இசைக் கூறுகள் (2000, மறுபதிப்பு 2001),


சங்கரதாஸ் சுவாமிகளின் சந்தங்கள் (2002, மறுபதிப்பு  2003) என்னும் இரண்டு நூல்களேயாகும். தமிழில் நாட்டிய இசை குறித்தே சில ஆய்வு நூல்கள் வந்துள்ளன. இவ்விரண்டு நூல்கள் மூலம் தமிழிசை ஆய்வுகளில் புதியதோர் களம் உருவாகியுள்ளது.  

"மங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம் மெய்யப்பன் தமிழாய்வகம்,2001


மேற்சுட்டியுள்ள நூல்கள் தவிர, சென்னை, தமிழிசைச் சங்கம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிட்டு வரும் பண்ணாராய்ச்சி மாநாட்டு மலர்கள் பயனுள்ள பல அரிய கட்டுரைகளைக் கொண்டவை என்பதை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டியது நம் கடமையாகும்.


உதவிய நூல்கள்:
இசை நூல் பதிப்புகள், அரிமளம் பத்மநாபன்