திருநீறு
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி
வெயிலில் காய வைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடிபுடம் போட்டுஎடுக்கவேண்டும். இப்போது இந்த உருண்டைகள்
வெந்துநீறாகி இருக்கும்.
இதுவே உண்மையான திருநீறாகும். திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்த வகையில் உடலின்
முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக்கொள்ளும் வழக்கம் சைவ, வைணவ மதத்தவர்களிடம் காணப்படுகின்றது. மனித உடலிலே நெற்றி
முக்கிய பாகமாகக்கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள்இழுக்கவும் பயன்படுகின்றது. சூரியக்கதிர்களின்
சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும்
அதனாலேயே திருநீறைநெற்றியில் இடுவார்கள்.
மனிதன் தன்மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை
உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான் .பசுமாட்டுச் சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடுஅறுகம்புல்
போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும்
போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது. இதைவிட இருபுருவங்களுக்கும்
இடையிலுள்ள பகுதியில் மிகநுண்ணிய நரம்பு அதிர்வலைகள் உள்ளன. அதனால் அந்த இடத்தைப்
பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த
இடத்தில் திருநீறு, சந்தனம்
போன்றவை இடப்படுகின்றன.
சந்தனம்
சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம்
கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற. நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும்
இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது. சந்தனம் இரு புருவங்களுக்கு
ம்இடையில் இடுகின்ற போது,
முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் Hippo campus என்னும்
இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான
முறையில் தொழிற்படும். நெற்றியின்
இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால்
மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மன ஒருமைப்பாடு
தோன்றும், சிந்தனை
தெளிவுபெறும், எதையும்
தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப்பொட்டு குளிர்ச்சியுடன்
இருக்கச் சந்தனம் சரியான மருந்து.
குங்குமம்
மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமி
நாசினிப் பொருட்கள் ஆகும்.
மனித உடலில் தெய்வ சக்திவாய்ந்தது நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு
நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும். ஹிப்னாட்டிஸம் உட்பட
எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு, நம் கபாலத்தில்
உள்ள சிந்தனை நரம்புகளின் முடிச்சு இருபுருவங்களுக்கு இடையில் உள்ளது. மனிதன் அதிகமாக
சிந்திக்கும் போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி தலைபாரம்,
தலைச்சுற்றல் ஏற்படும். மனஉளைச்சல் ஏற்பட்டுத் தன்நிலை மறக்கவேண்டிய
சூழ்நிலை உருவாகி பல விரும்பத் தாகத விளைவுகள் ஏற்படும்.
ஆகவே அந்த நரம்புமண்டலம் குளிர்ச்சியாக இருக்கவேண்டும்.சந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்குக்
குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு. எனவே அந்த நரம்புமண்டலம் குளிர்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காகச்
சந்தனம் பூசி, சந்தனம்
காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம். இவற்றைத் தரித்தால் புத்துணர்வும், புதுத்தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள்
தூண்டப்படுகின்றன. மனிதனின்
உடற்கூறுக்கு உகந்த முறைகளைத் தான்நாம் இறைவழிபாடுகள் மூலம் அடைகிறோம்.