Thursday 27 July 2017

சென்னை குடிநீர்-தெலுங்கு கங்கை திட்டம்_1977 ஆம் வருட ஒப்பந்தத்துடன் ஒரு அலசல்

சென்னையின் மக்கள் தொகை கடந்த 130 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ந்துவிட்டது. கடந்த காலங்களில் விஜயவாடாவிலிருந்து சென்னைக்கு 432 கிலோமீட்டர் ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வந்த வரலாறும் உண்டு. 1953-இல் ஆந்திர மாநிலம் மெட்ராஸ் மாகாணத்திலிருந்து பிரிந்தது முதல் கிருஷ்ணா நீரைப் பெற தமிழ்நாடு பல முயற்சிகள் எடுத்தது. அது பற்றி விரிவாக பார்ப்போம்.
தெலுங்கு கங்கா குடிநீர்த்திட்டம்_பின்னணி
சென்னைக் குடிநீர்
பெருநகரங்களில் வயதில் மிக குறைந்தது சென்னையாகும். பிரிட்டீஷ் குடியேற்றம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் 1641, செப்டம்பர் ஆகும். 1870-இல் மக்கள் தொகை 0.37 மில்லியன் ஆகும்.
கி.பி. 1870 வரை சென்னை மாநகருக்கென முறையான குடிநீர் விநியோக அமைப்பு இல்லை. பொதுப்பணித்துறை, தலைமைப் பொறியாளராக இருந்த ஜேம்ஸ் பிரேசர் (James Frazer), வேலூர் அருகே உற்பத்தியாகும் கொசஸ்தலையாற்றில் இருந்து தண்ணீரை சோழவரம் மற்றும் செங்குன்றம் ஏரிகளுக்குத் திருப்பி, கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்துக்குக் கொண்டு வருவதற்கான திட்டம் வகுத்தார். அதுதான் சென்னையில் முறையான கொண்டு வரப்பட்ட முதல் குடிநீர் விநியோகத் திட்டம். இதை 1872-இல் செயல்படுத்தினார். குழாய் வழியாக நீர் வழங்கும் திட்டமாகும் (Piped Water Supply System) பிரேசர் திட்டத்தை கொண்டுவந்தபொழுது மக்கள் தொகை 047 மில்லயன், தற்போது 174 சதுர கிலோமீட்டரில் 4.6 மில்லியன் மக்கள் உள்ளனர்.
சென்னை மாகாண கவர்னராக, பெண்ட்லாண்ட் பிரபு (H.E Lord Penland) இருந்தபொழுது, சிறப்பு பொறியாளராக இருந்த J.W. மெட்லி (J.W. Madley) கீழ்ப்பாக்கம் நீர் சுத்திகரிப்பு மையத்தை 17,டிசம்பர்,1914-இல் திறந்தார்.

1962—இல் கிருஷ்ணா-கோதாவரி நீரைக்கேட்டு, N.D.குல்காதி தலைமையில் ஒரு மனு அளிக்கப்பட்டது.  ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.


இந்திராகாந்தியின் முயற்சியில், 15, பிப்ரவரி,1976-இல் சென்னையில் பொதுக்கூட்டத்தில் ஆற்றங்கரை மாநிலங்களிடையே, (Riparian States)  இத்திட்டம் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
27, அக்டோபர், 1978-இல் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திலிருந்து திறந்தவெளி வாய்க்கால் மூலம் தண்ணீர்  பெற மாநில அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. 15, ஜூன்,1978-இல் நடைபெற்ற முதலமைச்சர்கள் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டது
ஆந்திர பிரதேசத்தில் குறுகியகால குடியரசுத்தலைவர் ஆட்சிக்குப்பின் (10, அக்டோபர் முதல் 10, டிசம்பர், 1973) 6, மார்ச், 1978 வரை ஜலகம் வெங்கலராவ் முதலமைச்சராக இருந்தார். அவருக்குப்பின் வந்த Dr. சென்னாரெட்டியும், தமிழ்நாடு முதலமைச்சர் M.G.ராமச்சந்திரனும் 15 டி.எம்.சி தண்ணீர் ஒப்பந்த்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதன்பின் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி ஒன்பதே மாதத்தில், அதாவது ஜனவரி, 1983-இல் ஆட்சியை பிடித்தார் N.T.ராமாராவ். தமிழ்நாட்டில் 1977 முதல் 1987 வரை M.G.ராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்தார்.
M.G.R. மீது மிகவும் மதிப்பு கொண்டவர் என்.டி.ராமராவ். இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டு பேரும் தங்கள் மொழி படவுலகில் சூப்பர் ஸ்டார்களாக விளங்கியவர்கள். இருவரும் அரசியலில் ஈடுபட்டு தனிக் கட்சி தொடங்கி முதல் அமைச்சரானவர்கள்.
சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆந்திரத்தின் வறட்சியான தென்பகுதிகளுக்குப் பாசனத்துக்கு தண்ணீர் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டும், சென்னையின் குடிநீர்ப் பற்றாக்குறையை மனதில் கொண்டும் இத்திட்டத்தை நிறைவேற்ற இருமாநில முதல்வர்களும், திரையுலக நண்பர்களுமான என்.டி.ராமராவும், எம்.ஜி.ஆரும் மிகுந்த முனைப்புகாட்டினர். அதன்படி அந்த சிறப்பு மிக்க ஒப்பந்தம் 


18,ஏப்ரல், 1983-இல் கையெழுத்தானது. அதன் பின் மகாராஷ்ட்ரா, அக்ர்நாடக, ஆந்திரபிரதேச, தமிழ்நாடு முதலமைச்சர்கள் முன்னிலையில் 25,மே, 1983-ல் இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் M.G.ராமச்சந்திரன் திட்ட முன்பணம்  ரூபாய் 30 கோடிக்கான செக்கை கொடுத்தார்.



அதன்பின் கிருஷ்ணா தண்ணீர் தமிழ்நாடு-ஆந்திரபிரதேச எல்லையை கடந்தது 29, செப்டம்பர்,1996 ஆகும்.

‘சாய்-கங்கா கால்வாய்’


தமிழக தலைநகர் மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து 25 கி.மீ. கால்வாய் பாதையை ரூ. 200 கோடியில் சீரமைத்த சத்யசாய் பாபா சென்னை மக்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்று வாழ்கிறார். 

ஆந்திர மாநிலம் கண்டலேரு நீர்தேக்கத் திலிருந்து 15 டி.எம்.சி. நீர் அனுப்பப்பட்ட போதிலும் 1996 முதல் 2000-ம் ஆண்டு வரை கால்வாய் சரிவர பராமரிக்கப் படாததால் சென்னைக்கு உரிய தண்ணீர் கிடைக்கவில்லை. சில வருடங்கள் அரை டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்தது.

இப்படி இந்தத் திட்டம் கானல் நீராகிக் கொண்டிருந்த நிலையில் தான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அறக்கட்டளை இந்த விஷ யத்தில் கவனம் செலுத்தியது. சாய்பாபா சொன்ன வார்த்தைகளை செயல்படுத்தும் பொறுப்பை சத்யசாய் சென்ட்ரல் டிரஸ்ட்  19,ஜனவரி, 2002 ஏற்றுக்கொண்டது. முதலில் கண்டலேரு நீர்தேக்கத்தை 35 டி.எம்.சி-யிலிருந்து 67 டி.எம்.சி-யாக உயர்த்தியது. கண்டலேருவிலிருந்து பூண்டி வரை 65 கி.மீ. நீள கால்வாயின் பக்க வாட்டு சுவர்கள் உறுதியான காங்கிரீட் கலவைகளால் பலப்படுத் தப்பட்டது. மேலும், தண்ணீரை பூமி உறிஞ்சுவதைத் தடுக்க வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாலி எதிலின் நார்வகைகளையும் பயன் படுத்தி சர்வதேச தரத்தில் சீரமைத்தனர். இப்பணிக்கு 4000 பேர்களும், 50 பொறியாளர்களும் பணியாற்றினர். இந்தப் பணிகள் முடிந்ததும் 2004 நவம்பர் 24-ல் சத்ய சாய் பாபாவின் பிறந்த நாளில் கண்டலேருவில் திறக்கப்பட்ட தண்ணீர்த் தடைகள் எதுவுமின்றி துள்ளிப் பாய்ந்து, நாலே நாட்களில் தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட்டைத் தொட்டது.  தெலுங்கு-கங்கை என ஆந்திராவில் அழைக்கப்பட்ட இந்தத் திட்டம் தற்போது ‘சாய்-கங்கா’ என ஆந்திர அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம்
கிருஷ்ணா நதியிலிருந்து மெட்ராஸ் மாநகருக்கு குடிநீர் பெற ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்
நாள்:18.4.1983

சென்னை மாநகராட்சியின் குடிநீர் பற்றாக்குறையை கணக்கில் கொண்டு, தமிழ்நாடு போதிய நீர்வள ஆதாரங்கள் இல்லாததாலும், மகாராஷ்ரா, கர்நாடக, ஆந்திர பிரதேச அரசுகள் 14, ஏப்ரல், 1976 அன்று தங்களின் பங்குகளிலிருந்து 5 டி.எம்.சி கிருஷ்ணா நீரை வழங்க ஒப்புக் கொண்டு, அதன்மூலம் தமிழ்நாடு வருடத்திற்கு 15 டி.எம்.சி குடிநீரை மெட்ராஸ் மாநகருக்கு வழங்கவழிவகை செய்தது.

அவ்வாறிருப்பதால், 27, அக்டொபர், 1977-இல் மத்திய வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன அமைச்சரால் திரட்டப்பட்ட கூட்டத்தில், கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்ரா, ஆந்திரபிரதேச அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 முதல் அக்டோபர் கால கட்டத்தில், ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திலிருந்து 15 டி.எம்.சிக்கு மிகாமல், திறந்தவெளி கால்வாய்கள் வழியாக, ஆரம்பப் புள்ளியானது ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு அரசுகளிடையே ஒப்புக் கொள்ளப்பட்டு, சோமசீலா மற்றும் ஸ்ரீசைலம் இடையே வெளியேற்றம் 1500 கியூசெக்ஸ்க்கு மிகாமல் பார்த்துக் கொண்ள்ளுமாறு, வெளிபோக்கி வசதி செய்து, இரு மாநிலங்களுக்கிடையே ஒப்புக் கொள்ளப்பட்டு, ஸ்ரீசைலம் முதல் பூண்டி வரை நீர்வரத்துக்கான செலவு, பராமரிப்பு, இயக்கம் போன்ற செலவுகளை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் அவ்வாறிருப்பதால், மேற்கூறிய ஒப்பந்தம் சம்மந்தப்பட்ட மாநில அரசுகளின் ஏற்புறுதிக்கு (Ratification) உட்பட்டது.

மேலும் அவ்வாறிருப்பதால், கர்நாடகா, தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா அரசுகள் 1977-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்புறுதி கொள்ளும் போது, ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் எவ்வகையிலும் ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணாநதி நீரை வேளாண்மைக்கும், மற்ற நுகரவு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தும் உரிமையை பாதிக்கக் கூடாது;

மேலும் அவ்வாறிருப்பதால், மேலே குறிப்பிட்ட முடிவுகளை பின்பற்றும் வகையில் ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு முதலமைச்சர்கள் 15,ஜூன்,1987-இல் ஹைதராபாத்தில் சந்தித்து, இத்திட்டம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆய்வின் முன்னேற்றங்களை இணைப்புக் குழுவினால் (Liaison Committee) கண்காணிக்கப்பட்டது.

மேலும் அவ்வாறிருப்பதால், ஆந்திரபிரதேச மற்றும் தமிழ்நாடு அரசுகள் ஆய்வுகளை மேற்கொண்ட வேளையில், தொழில்நுட்ப நீதியான சாத்தியக் கூறுகளை நிறுவின.

மேலும் அவ்வாறிருப்பதால், ஆந்திர அரசு கிருஷ்ணா நீரை மாநிலத்திற்குள், வேளாண்மை மற்றும் இதர காரியங்களுக்கு பயன்படுத்த பல திட்டங்களிலும், இரு மாநிலங்களும் பொது திட்டங்களிலும் அங்கம் வகித்தது.

இப்போது, ஆந்திரபிரதேசம் தமிழ்நாடு தங்கள் வழித்தோன்றல்கள், பிரதிநிதிகளுக்காக, அரசுகள் ஒப்புக் கொண்டு தங்களையும், தங்களை பிணைத்துக் கொண்டதற்கு பின்வருமாறு சாட்சியாயின:-

(i) ஆந்திரபிரதேச மற்றும் தமிழ்நாடு அரசுகள் 1977-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் கூறு-(iv)இன் படி கடப்பா தாலுக்காவிலுள்ள சென்னமுக்கபள்ளியிலிருந்து கால்வாய் எடுத்துக் கொள்ள (Off-take) ஒப்புக் கொள்கிறது.

(ii). ஆந்திரபிரதேச மற்றும் தமிழ்நாடு அரசுகள் மெட்ராஸ் மாநகர குடிநீர் திட்டத்தின் அங்கங்கள் அட்டவணை “A”-இல் குறிப்பிட்டுள்ளவாறு, ஆந்திரபிரதேச எல்லைக்குள், சொந்த ஆட்களையும் பொருட்களையும் வைத்துக் கொண்டு கட்ட வேண்டும். செலவுத்தொகை பின்வரும் கூறுகளில் விவரித்தவாறு பிரித்துக் கொள்ளப்படும்.

(iii). ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அரசுகள் அட்டவணை “A“ யில் குறிப்பிட்டுள்ள வாய்க்கால், பராமரிபுடனான கட்டுமான வளர்ச்சி, ஸ்ரீசைலம் நீர்த்தேக்கம் அட்டவணை “B“ யின் படி செலவுகளை பங்கிட்டுக் கொள்ள ஒப்புக்கொள்கிறது.

(iv) ஆந்திரபிரதேச மற்றும் தமிழ்நாடு அரசுகள் மெட்ராஸ் மாநகர குடிநீர் திட்டத்தினைப் பொறுத்தவரை தண்ணீர் அனுப்பும் முறைகளில் ஏற்படும், அனுப்புகை இழப்பை(Transmission Loss, ஸ்ரீசைலம் முதல ஆர்திரப்பிரதேசம்-தமிழ்நாடு எல்லை வரை வருடத்திற்கு 3 டி.எம்.சி என ஒப்புக்கொள்ளப்படுகிறது. இந்த தீர்வு நடவடிக்கைகளுக்கான (Remudial Measures) செலவுகள், நீர் அனுப்பும் முறை, தண்ணீர் பெறப்பட்ட விகித்ததிற்கு ஆந்திர பிரதேசம் தமிழ்நாடு அரசுகள் பொதுவாக பகிர்ந்து கொள்ளும். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பெறும் முறைகளில் முழு தொகையும் ஏற்கிறது.

(v) ஆந்திரப் பிரதேச அரசு கண்டலேறு நீர்த்தேக்கத்தில் மெட்ராஸ் மாநகர குடிநீருக்காக 5 டி.எம்.சி தண்ணீரை தேக்கிக் கொள்ள ஒப்புக்கொள்கிறது. தமிழ்நாடு எல்லைவரை அட்டவணை “C“ யில் குறிப்பிட்டுள்ள கூட்டு நீர்ப்பாசனம்-நீர்வரத்து(Irrigation-cum-watersupply) கால்வாய் வழியாக, தமிழக எல்லையில், உட்கூறு-(iv) இல் குறிப்பிட்ட இழந்த தண்ணீர் (Less Losses) இன்றி, வருடத்திற்கு 15 டி.எம்.சி தண்ணீரை அனுப்ப ஒப்புக்கொள்கிறது.

2. ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அரசுகள் அட்டவணை “B“ யில் குறிப்பிட்டுள்ள பணிகளை, கூட்டு திட்ட அறிக்கையில் உள்ளவாறு நிறைவேற்ற ஒருமனதாக ஒப்புக் கொள்கிறது. மெட்ராஸுக்கு தண்ணீர் அனுப்பும் திட்டத்தில்,  கூட்டு அறிக்கையில் படுகையளவில், நீரியல் (Hydraulic) மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால், வாய்க்காலில் செய்ய வேண்டியிருந்தால், இணைப்புக்குழுவின் (Liaison Committee) ஒப்புதலுக்கு பின்னரே நடைமுறை படுத்தமுடியும்.

3. தமிழக அரசு இதன் முலம் திட்டத்தில் குறிப்பிட்ட விகிதத் தொகையை, அட்டவணை “B“ யில் உள்ள வழிகாட்டுதலின்படி ஏற்றுக் கொள்ள, ஒப்புக் கொண்டு, திட்டத்திற்கு தேவையான நிதியை முன்னதாக ஒதுக்க இரு மாநில அரசுகளும் ஒப்புக் கொள்கின்றன. தமிழ்நாடு அரசு செலுத்த வேண்டிய தொகையை அரையாண்டுக்கு எப்ரலிலும், ஆந்திர அரசு அக்டோபரிலும் செலுத்தவேண்டும். இறுதியில் மீதமுள்ள தொகை வரும் ஆண்டுகளில் சரிசெய்துகொள்ளப்படும். ஒவ்வொரு திட்டத்திற்கு முன் திட்டச்செலவு மொழியப்படும், தமிழ்நாடு அரசின் செலுத்தும் தொகையாக ஒழுங்குபடுத்தப்படும்.

4. அட்டவணை “B“ யில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதளின்படி தமிழ்நாடு அரசு , ஒட்டுமொத்த சேமிப்பு மற்றும் அனுப்பும் அமைப்பை (Storage-cum-Conveyance system) பராமரிப்புச் செலவின், விகிதத்தை ஏற்றுக் கொள்ள  ஒப்புக் கொள்கிறது. அந்த செலவுத்தொகை ஏப்ரல் மாதத்தில் கொடுக்கப்பட வேண்டும். மேலும், அந்ந்திர அரசு குறிப்பிடும் செலவினங்களில் மீதி வரும் வருடங்களில் சரி செய்து கொள்ளப்படும்.

5. இணைப்புக் குழுவானது, திட்டப்பணிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும். மேலும் திட்டம் முடியும் வரை இரு அரசுகளின் ஒத்துழைப்பை உறுதிசெய்யும்.

6. கிருஷ்ணா நதிநீர் தமிழ்நாடு அரசு குடிநீருக்கு மட்டுமின்றி வேறு காரியங்களுக்கு கிடையாது.

7. ஆந்திரபிரதேச மற்றும் தமிழ்நாடு அரசுகள் மெட்ராஸ் மாநகர குடிநீர் திட்டம் நிறைவடைய குறைந்தபட்சம் 3 வருடங்களும், அதிகபட்சம் 6 வருடங்களும் ஆகுமென ஒப்புக்கொள்கிறது. இரு அரசுகளும் ஹிட்டம் விரைவில் முடிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். இந்நோக்கத்தின் வழியில் மற்றும் ஒப்பந்தத்தின் கூறு-3 இன் கூறப்பட்டுள்ள விதிகளுக்குட்பட்டு, தமிழ்நாடு அரசு, ஆந்திரபிரதேச அரசுக்கு ஏப்ரல் அரையாண்டு பணம் ரூபாய் 30 கோடியை ஏப்ரல் 1983-ல் செலுத்தவும், 1980-84, 1984-85, 1985-86 இல் அட்டவணை “A“ இல் குறிப்பிட்ட அம்சங்களுக்கு செலுத்த ஒப்புக் கொள்கிறது.

8. முன்சென்ற விதிகளின் அடிப்படையில் ஒப்பந்தத்தின் எதுவும், ஆந்திர பிரதேச அரசை கிருஷ்ணா நீரைப் பயன்படுத்துவதை சுருக்கவோ அல்லது உரிமையை பறிக்கவோ பொருள்கொள்ள முடியாது.

9. அட்டவணை “A“ இல் குறிப்பிட்டுள்ள அங்கங்களுக்கு பாதகமின்றி, ஆந்திர மாநில அரசு கிருஷ்ணா நதி நீரை மாநிலத்திற்குள் பயன்படுத்துவதில் அவ்வப்போது அங்கங்களை சேர்த்துக் கொள்ளலாம்.


ஒப்பம்/-(18.4.1983)N.T.ராமராவ்
முதலமைச்சர்
ஆந்திரபிரதேசம்

ஒப்பம்/-(18.4.1983)
M.G.ராமச்சந்திரன்
முதலமைச்சர்
தமிழ்நாடு




அட்டவணை “A“

திட்டத்தின் அங்கங்கள்

இத்திட்டம் பின்வரும் அங்கங்களைக் கொண்டிருக்கும்.

1. பொத்திரெட்டிபாடு தலை மதகு(Head Regulator) முதல் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கம் வரையிலான அணுகு வாய்க்கால்

2. பொத்திரெட்டிபாடுவிலுள்ள தலை மதகு

3. பொத்திரெட்டிபாடுவிலிருந்து, பனகாசெர்லா குறுக்கு மதகு(Cross Regulator)வரையிலான கால்வாய்

4. பனகாசெர்லா குறுக்கு மதகு

5. பனகாசெர்லா முதல் நீர் ஏற்பு முனை வரையிலான முக்கிய கால்வாய்

6. சோமசீலா வரையிலான திறந்தவெளி கால்வாய்

7. சோமசீலா நீர்த்தேக்கம் நிலை-II

8. சோமசீலா முதல் கண்டலேறு நீர்த்தேக்கம் வரையிலான கால்வாய்

9. கண்டலேறு நீர்த்தேக்கம்

10. கண்டலேறு நீர்த்தேக்கம் முதல் தமிழ்நாடு ஆந்திர பிரதேச எல்லை வரையிலான கால்வாய்


ஒப்பம்/-(18.4.1983)
N.T.ராமராவ்
முதலமைச்சர்
ஆந்திரபிரதேசம்

ஒப்பம்/-(18.4.1983)
M.G.ராமச்சந்திரன்
முதலமைச்சர்
தமிழ்நாடு



அட்டவணை “B“

1
ஸ்ரீசைலம் நீர்த்தேக்கம்
திட்டத்திலுள்ள நீர்ப்பாசன அங்கத்தில் கருதப்பட்ட இரு மாநிலங்களுக்கான செலவு விகிதங்கள்
2
பொத்திரெட்டிபாடு தலை மதகு(Head Regulator) முதல் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கம் வரையிலான அணுகு வாய்க்கால்



கருதப்பட்ட ஆண்டு பயன்பாட்டின் அடிப்படையில்
3
பொத்திரெட்டிபாடுவிலுள்ள தலை மதகு
4
பொத்திரெட்டிபாடுவிலிருந்து, பனகாசெர்லா குறுக்கு மதகு(Cross Regulator)வரையிலான கால்வாய்
5
பனகாசெர்லா குறுக்கு மதகு
6
பனகாசெர்லா முதல் நீர் ஏற்பு முனை வரையிலான முக்கிய கால்வாய்
7
சோமசீலா வரையிலான திறந்தவெளி கால்வாய்
முழுத்தொகையும் தமிழ்நாடு
8
சோமசீலா முதல் கண்டலேறு நீர்த்தேக்கம் வரையிலான கால்வாய்
தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்ட மற்றும் இரண்டாம் நிலையில் ஆந்திர பிரதேசத்திற்காக அனுப்பப்பட்ட மற்றும் சேமிக்கப்பட்ட அளவுகளின் விகிதம்
9
சோமசீலா நீர்த்தேக்கம் நிலை-II 
கருதப்பட்ட ஆண்டு பயன்பாட்டின்படியான தகவு(Prorata)
10
கண்டலேறு நீர்த்தேக்கம்
தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட சேமிப்பு இடத்திற்கும், வடிவமைக்கப்பட்ட நீர்த்தேக்கத்தின் கொள்ளளவிற்குமான விகிதம்
11
கண்டலேறு நீர்த்தேக்கம் முதல் தமிழ்நாடு ஆந்திர பிரதேச எல்லை வரையிலான கால்வாய்
ஒரு கியூசெக்ஸ் – நீர்த்தேக்க மைல் வீதம்

குறிப்பு: அங்கப்பணிகளில் மாறுதல்கள், சேர்த்தல்கள் தவிர பிற பணிகளுக்கான செலவுகள் புதிதாக வரையப்பட வேண்டும்


ஒப்பம்/(18.4.1983)
N.T.ராமராவ்
முதலமைச்சர்
ஆந்திரபிரதேசம்

ஒப்பம்/- (18.4.1983)
M.G.ராமச்சந்திரன்
முதலமைச்சர்
தமிழ்நாடு


அட்டவணை “C

தமிழ்நாடு எல்லையில் வழங்கப்பட வேண்டிய தண்ணீர் அட்டவணை

மாதம்
வெளியேற்றம்
குறிப்பு
ஜூலை
1000 கியூசெக்ஸுக்கு மிகாமல்
எல்லைப் பகுதியில் நிலையான வீதத்தில் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை
4 டி.எம்.சியும் 1000 கியூசெக்ஸுக்கு மிகாமல் வழங்கவேண்டும்.
ஆகஸ்ட்
1000 கியூசெக்ஸுக்கு மிகாமல்
செப்டம்பர்
1000 கியூசெக்ஸுக்கு மிகாமல்
அக்டோபர்
1000 கியூசெக்ஸுக்கு மிகாமல்
நவம்பர்
இல்லை
டிசம்பர்
இல்லை
ஜனவரி
1000 கியூசெக்ஸுக்கு மிகாமல்
பிப்ரவரி
1000 கியூசெக்ஸுக்கு மிகாமல்
மார்ச்
1000 கியூசெக்ஸுக்கு மிகாமல்
ஏப்ரல்
1000 கியூசெக்ஸுக்கு மிகாமல்
மே
இல்லை
ஜூன்
இல்லை


தமிழ்நாட்டிற்கான வரத்தை கணக்கிட, அளவீட்டுக் கருவியை கூட்டு கூர்நோக்கின் போது       , தமிழ்நாடு எல்லையில் நடத்திட இரு மாநில அரசுகளும் ஒப்புக் கொள்கின்றன.




ஒப்பம்/- (18.4.1983)
N.T.ராமராவ்
முதலமைச்சர்
ஆந்திரபிரதேசம்

ஒப்பம்/-(18.4.1983)
M.G.ராமச்சந்திரன்
முதலமைச்சர்
தமிழ்நாடு




 Lr. C.P.சரவணன், வழக்கறிஞர்

Sunday 21 May 2017

பஸ் ஸ்டிரைக் நியாயமா ?

போராட்ட நேரமா இது?

கடந்த ஏப்ரல் மாதம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் 64 துறைகளைச் சேர்ந்த 5 லட்சம் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இப்போது, புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் 15-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன. அண்ணா தொழிற்சங்கம் தவிர தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. ஐ.என்.டி.யு.சி., பாட்டாளி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், தொழிலாளர் நல வாரிய துணை ஆணையர் யாஸ்மின் பேகம் தலைமையில் போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தது. மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள், அண்ணா தொழிற்சங்கம் ஆர்.சின்னசாமி, தொ.மு.ச. சண்முகம், சி.ஐ.டி.யு. ஆறுமுக நயினார், ஏ.ஐ.டி.யு.சி. லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டவில்லை.

இருப்பினும், தமிழகத்தின் பல இடங்களில் முன் கூட்டி இன்றே ஸ்டிரைக் தொடங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. பல பேருந்துகள் பனிமனையிலேயே நிறுத்தப்பட்டன.
20 ஆண்டு கால நிலுவைத்தொகையை ஒரே நாளில் ஒதுக்க வேண்டும் என சில சங்கங்களின் நிர்வாகிகள் கோருவது சாத்தியமில்லை. மொத்தமுள்ள 47 தொழிலாளர்கள் சங்கங்களில் 37 சங்கங்கள் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தும் பேருந்துகள் ஓடவில்லை.

தற்போது, போக்குவரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை தோல்வி ஏற்பட்டு ஊழியர் போராட்டம் நேற்றே தொடங்கி பொதுமக்கள் பாதிப்பு அடைவது ஏற்புடையது அல்ல.

கம்யூனிஸ்டுகளை பொறுத்தமட்டில் எதிலும் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதை விட தீவிரமாக போராட்டம் நடைபெற வேண்டும் என்பதிலே அதிகம் நாட்டம் கொண்டவர்கள். அவர்கள் தொழிற்சாலைகளை இயங்கவிடமாட்டார்கள், பேருந்துகளை ஓடவிடமாட்டார்கள், புதிதாக நிறுவனங்களை நிறுவ விடமாட்டார்கள், இருக்கும் தொழிலாளர்களையும் நிம்மதியாக வாழ விடமாட்டார்கள் என்பது மக்களின் சமீபத்திய கருத்தாக உள்ளது. நம் முன்னோடி தொழிற்சங்க வளர்ச்சியை தெரிந்து கொள்வது இந்நேரத்தில் அவசியம்.

இந்திய தொழிற்சங்க வரலாறு

தொழிற்சங்கம் என்ற கருவானது முதன்முதலில் இந்தியாவில் 1890-ஆம் ஆண்டில் அறிமுகமானது. ஆனால் ஐரோப்பாவில் தொழிற்புரட்சி ஏற்பட்டவுடனேயே தொழிற்சங்கங்கள் பல அமைக்கப்பட்டுவிட்டன. நமது நாட்டில்தான் பல ஆண்டுகளுக்குப் பிறகு 20-ஆம் நூற்றாண்டில் முறையாக அமைக்கப்பட்டன எனலாம், 18990-ஆம் ஆண்டில் N.M.லோகண்டே என்ற பம்பாய் தொழிலாளி “Bombay Mill-hands Association என்ற தொழிற்சங்கத்தையும், தீனபந்து என்ற தொழிலாளர் பத்திரிக்கையையும் தொடங்கினார். அதன்பின் Amalgamated  Railway servants of India and Burma (1897), Printers Union (1904), The Bombay Postal Union (1907) .என்று பல தொழிற்சங்கங்கள் நமதுநாட்டில் ஆரம்பிக்கப்பட்டாலும் உண்மையில் தொழிற்சங்கங்களுக்கு இருக்க வேண்டிய அம்சங்களை பெற்றிருக்கவில்லை.

1918-ஆம் ஆண்டு வாடியா என்பவரால் Madras Textile labour Union’ என்ற தொழிற்சங்கம் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே முறைப்படி அமைக்கப்பட்ட முதல் தொழிற்சங்கமாகும்.

அதனைத் தொடர்ந்து அகில இந்திய அளவில் All India Trade Union Congress (AIT UC)என்ற தொழிற்சங்கத்தை பிரபல காங்கிரஸ் தலைவர்களான சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு , நேதாஜி சந்திர போஸ் ஆகியோர் ஆரம்பித்தனர். 1929-ஆம் ஆண்டு  N.M.ஜோஷி தலைமையில் மிதவாத தொழிலாளர்கள் பிரிந்து சென்று  Indian Trade Federation (ITUF)என்ற தொழிற்சங்கத்தினை தொடங்கினார்கள். காங்கிரஸ் கட்சியிலுள்ள தலைவர்கள் AITUC  பிரிந்து 1946-ஆம் ஆண்டு Indian National Trade Union Congress (INTUC) என்ற பெயரில் தொழிற்சங்கத்தினை தொடங்கினர். தற்போதைய பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னொடிகளான ஜனசங்க கட்சி Bharatia Mazdoor Sangh(BMS) என்ற தொழிற்சங்கத்தினை அமைத்தனர். தமிழகத்தில் திமுக ஆதரவு தொழிலளர்கள் LPF என்ற தொழிற்சங்கத்தையும், கம்யூனிஸ்டிலும் ரஷ்ய சார்பு, மாசேதுங் சார்பு என பிளவு ஏற்பட்டு Centre of Indian Trade Union (CITU) 1959-இல் உருவானது.

 1972-இல் அ.இ.அ.தி.முக தோன்றிய பின்  “அண்ணா தொழிற்சங்க பேரவை  உருவானது. 1969-இல் தொழிலாளர் குறித்த தேசிய கமிஷன் (National Commision on labour)தொழிற்சங்கங்களில் அரசியல்வாதிகளையும், வெளியாட்கள் ஊடுறுவலை தடுக்க வேண்டியது அவசியம் என கூறியது. அது சாத்தியமா என்பது கேள்வி குறியே?

கம்யூனிச அறிக்கையில் கூறப்பட்டுள்ள கொள்கைகள்:

கார்ல் மார்க்ஸும் ஏங்கல்சும் லண்டனில் 30, ஜனவரி,1848 அன்று கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர். அதன்படி  தொழிலாளி (Prolectarian) மற்றும் கம்யூனிஸ்ட்(Communist) இடையேயான வித்தியாசத்தினை விளக்கினர். கம்யூனிஸ்ட் எப்போழுதும் பெரும்பான்மையானவர்களின் விருப்பத்தை ஆதரிக்கும் மற்றும் அதை நிறைவேற்றும் நடவடிக்கைகளை கொண்டு முன்னிறுத்தும்.

கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகளை பற்றிய கொள்கை விளக்கம் ஆகும். பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற முற்றாக தனது உழைப்பை விற்பனை செய்வதன் மூகம் வாழ்ந்து வருகிற வர்க்கமாகும். தனிமனிதனின் சொத்துகளை அழிப்பதன் மூலம், தனிமனிதனிம் உழைப்பின் மூலம் தனியார்கள்  சொத்து சேர்ப்பதை எதிர்க்க்கும். மேலும் மூல தனம் என்பது தனிமனித சொத்து அல்ல என்றும் சமூக சொத்து என்று கூறியது மேலும்:

1)   அனைத்து நில சொத்துகளின் உபயோகம் மற்றும் வாடகை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செல்ல வேண்டும்
2)   கடுமையான வருமான வரி இருக்க வேண்டும்
3)   அனைத்து வாரிசுரிமைகளு நீக்கப்பட வேண்டும்
4)   கலகக்காரர்கள் மற்றும் இடம் பெயர்ந்தோரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்ர்டும்.
5)   தொலைத் தொடர்பு, போக்குவரத்து போன்றவை அரசே நடத்த வேண்டும்.
6)   தொழிற்சாலை, உற்பத்தி போன்றவற்றையும் அரசே செய்ய வேண்டும். புறம்போக்கு நிலங்களை சரியாக பயன் படுத்த் வேண்டும்.
7)   அனைத்து கொடுக்கல் வாங்கல்கள் தேசிய வங்கிகள் மூலம் அரசே செய்ய வேண்டும்.
8)   அனைத்து தொழிலாளர், வேளாண் துறை தொடங்க வேண்டும்.
9)   உற்பத்தி மற்றும் வேளாண்மைத்ட் துறையை இணைக்கவும், நகர்புற, கிராமப் புற பாகுபாட்டை கலையவும் மக்கள் பரவலை சீராக்கவும் முயற்சி மேற்கஒள்ல வேண்டும்.
10)  பள்ளிகள் இலவச கல்வி கொடுக்கப்பட வேண்டும், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் கல்வியில் தொழில் உற்பத்தி பற்றி கற்றுக் கொடுக்க வேண்டுமென்பதும் அதன் கொள்கைகளாக வெளியிடப்பட்டது

தொழிலாளர்களுக்கு,

அத்தியாவசியப் பணிகள் சட்டம்,1981 பிரிவு. 1 (a) II போக்குவரத்துச் சேவைகள்
உள்ளது. தொழிலாளர் நலன் முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆயினும், சுமார் 1.5 லட்சம் போக்குவரத்து தொழிலாளர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பது சரியே, அதே வேளையில் அரசு பேருந்தில் தினசரி பயணிக்கும் பல லட்சம் பொதுமக்கள் நலனும் பாதிக்காமல் இருக்க வேண்டுமல்லவா? நாளை முதல் போராட்டம் என்று அறிவித்து விட்டு நேற்றே திடீரென பொதுமக்களை நடுவழியில் குழந்தை குட்டிகளோடு இறக்கி விட்டு பரிதவிக்க விடுவது என்ன நியாயம்.

மார்க்ஸும், ஏங்கெல்சும் படிப்பித்த கம்யூனிசத்தை கடைபிடிக்க வேண்டும். ஏற்கனவே பல பெரும் வெளிநாட்டு கம்பெனிகள் ஆந்திராவுக்கு செல்லும் நிலையில், தமிழக கம்யூனிசவாதிகள் போகும் பாதை தமிழகத்தை நலிவுப் பாதைக்கு கொண்டு செல்லும்.

வார இறுதியில் ஊருக்கு சென்றுவிட்டு பணிக்குத் திரும்ப முடியாமல் பலர் தவிப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. +2, 10-வது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த போக்குவரத்து தொழிலாளர்களை தூண்டி விட்டு, மக்களை அலைகழித்து அதன் மூலம் அரசின் ஆதாயம் பெரும் அனைத்து கட்சிகளையும் மக்கள் உற்றுநோக்கிக் கொண்டுள்ளனர் என்பதை அறிய வேண்டும். எஸ்மா சட்டத்தை அரசு கையில் எடுத்தால், மக்கள் வரவேற்பர் என்பதை தொழிலாளர் அறிதல் நலம்.

மக்கள் நலம் காப்போம்.
C.P.சரவணன், வழக்கறிஞர்

references::

1.        “Manifesto of communist Party” by Karl Marx and Frederick Engels-1908

2.        தொழிலாளர் சட்டங்கள், மா.நல்லதம்பி 2012